வெள்ளி, 26 ஜூலை, 2013

வளரும் கவிதை: திருக்குறளில் தளைப் பிழையா?

ஆய்தமும் குறளும்
திருவள்ளுவர் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார். இவரா தளை தட்டுமாறு கவிதை யாத்தார்? நம்ப இயலவில்லை. கற்றிலனாயினும் கேட்க அ தொருவற்கு, வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அ தொப்ப தில், அற்றார் அழிபசி தீர்த்தல் அ தொருவன் குறள்களில் தளை தட்டியுள்ளது எனும் கேள்வி நம்மை யாப்பிலக்கணத்தில் நீந்தச் செய்தது.
“தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே, அளபெடை அல்லாக் காலை யான”(யாப்பருங்கலம்), “அளபெழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும் அலகியல் எய்தாது என்மனார் புலவர்” (அவிநயம்), “ஒற்று அளபாய்விடின் ஓர் அலகாம்”(யாப்பருங்கலக்காரிகை).
இச்சூத்திரங்களை அரணாகக் கொண்டு பார்க்கும்போது ஓருண்மை புலனாகிறது. யாப்பில் ஒற்றுக்கு அலகு இல்லை. ஆனால், அதே ஒற்று அளபெடுத்தால் மட்டும் அலகு பெறுகிறது. ஒருவேளை குறட்பாக்களில் ஒற்றளபெடை இருந்திருக்குமோ என்ற ஐயப்பாடும் எழுகிறது..
இது ஒற்றளபெடை குறித்த இலக்கணப் புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
பொதுவாக எழுத்துகள் தன் மாத்திரை அளவில் இருந்து பாதியாகக் குறைவதைச் சுட்ட புள்ளி இட்டனர் போலும்! க – ஒரு மாத்திரை. க் – அரை மாத்திரை. ம் – அரை மாத்திரை ம் (உள்ளே புள்ளி இட்டால்) – கால் மாத்திரை. குற்றியலுகரமும் குற்றியலிகரமும் புள்ளி பெற்றன. தொல்காப்பியமும் சங்கயாப்பு எனும் இலக்கண நூலும் இத்தகவலைத் தெரிவிக்கின்றன. ஆனால், ஒற்றளபெடைபற்றிய வரிவடிவம் நன்னூலில் மட்டும் இடம்பெறுகிறது. இது காலத்தால் பிந்தியது.
வள்ளுவர் காலமோ ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்டது.
வரி வடிவம் பற்றிய ஆய்வும் பதிப்புப் பற்றிய ஆய்வும் நம்மை உந்துகின்றன.
எப்படியோ திருக்குறளில் வந்துள்ள அந்த ஆய்த எழுத்து அலகு பெற்றுவிட்டது. அக்குறட்பாக்கள் இலக்கணம் கடந்து காலம் கடந்து கோலோச்சி நிற்கின்றன.
ஆய்த எழுத்தே ஒருசில வேளை
அலகு பெறுதல் அறி --
கொ.சுப. கோபிநாத், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்.